கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் பலி!
Mayoorikka
2 years ago

கொழும்பு – முகத்துவாரம் (மோதர) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பாவத்த, ரெட்பானாவத்த பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 23 வயதான இளைஞரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



