மாயமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ காணும் இடத்தில் கைது செய்ய உத்தரவு

Kanimoli
4 years ago
 மாயமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ காணும் இடத்தில் கைது செய்ய உத்தரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக இரண்டு குற்றப்புலனாய்வு குழுக்கள் குருநாகல் மற்றும் கொழும்புக்கு விரைந்துள்ளன.


கடந்த மே மாதம் 9ஆம் திகதி கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

கோட்டா கோ கம தாக்குதல்
9வது சம்பவத்தில் சந்தேகநபர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வரை சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று முன்தினம் (01) சந்தேகநபர்களாக பெயரிட்டுள்ளது.

இதில் மஹிந்த கஹந்தகம காவல்துறையில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4