மட்டக்களப்பிற்கு... 50 ஆயிரம், இந்திய நிவாரண பொதிகள் ஒதுக்கீடு!

#SriLanka #Food #Batticaloa
மட்டக்களப்பிற்கு... 50 ஆயிரம், இந்திய நிவாரண பொதிகள் ஒதுக்கீடு!

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் பொதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

இந்திய நிவாரணப் பொதிகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் இலங்கையில் வறுமையில் வாடும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களை இணையவழியில் சந்திப்பு நடத்திய உயர் அதிகாரிகள் மாவட்டத்தில் வறுமையில் உள்ள மக்களின் புள்ளிவிபரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன், மாவட்டத்திற்கான உலர் உணவு பொதிகளின் எண்ணிக்கை  கேட்டறிந்ததுடன்  அனைவுரக்கும் வழங்கவேண்டும் என அரசாங்கம் திட்டமாக இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 84 ஆயிரம்  குடும்பங்கள் இதில் முதற்கட்டமாக தலா 10 கிலோ நிறை கொண்ட 50 ஆயிரம் நிவாரண பொதிகள்  கிடைக்கவுள்ளதுடன்  அதனை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு தலா ஒரு பொதிகள்  வழங்கவுள்ளதுடன் அதன் பின்னர் வரும் நிவாரணப் பொதி ஏனையவர்களுக்கு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4