அலரி மாளிகையின் வாயிற் கதவை உடைக்க முற்படும் மக்கள்: மீண்டும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்
#SriLanka
#Lanka4
Shana
3 years ago

அலரி மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்டவர்கள் மீது பொலிஸார் மீண்டும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்
அலரி மாளிகையின் வாயிற்கதவினை உடைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டக் காரர்கள் உள்ளே செல்ல முற்படுகிறார்கள்
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்தநிலையில் அலரி மாளிகையைச் சுற்றி தற்போதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சற்று முன்னர் பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



