அஞ்சல் சேவையாளர்கள் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு.
#SriLanka
#Lanka4
Shana
3 years ago

கோட்டா கோ கம“ மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அஞ்சல் சேவையாளர்கள் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அஞ்சல் சேவையாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி 2 மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.
அரசாங்கம் பதவி விலகும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
சகல தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



