பிரதமர் மஹிந்த வேண்டும் - அலரி மாளிகையில் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
Nila
3 years ago

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அலரி மாளிகை பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மகிந்த தமக்கு வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச உள்ள அரசாங்கமொன்றே தமக்கு தேவையாக உள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“நாம் உங்களுக்கு வாக்கு வழங்கி உங்களை தெரிவு செய்தோம், எனவே நீங்கள் பதவியை இராஜினாமா செய்யக்கூடாது” என்பதே பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கையாக உள்ளது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.



