தீவகத்தில் கால்பதிக்க தயாராகும் இந்தியா. இந்திய அதிகாரிகள் களவிஜயம்
#SriLanka
#Jaffna
#India
Mugunthan Mugunthan
3 years ago

தீவகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள மீள்புதுப்பிக்கதகு சக்தி திட்டத்தை யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் உட்பட்ட தூதரக அதிகாரிகள் நேற்று நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
யாழ்.தீவகப் பகுதிகளான நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு பகுதிகளில் ஏற்கனவே சீனாவுக்கு வழங்கப்பட இருந்த மீள்புதுப்பிக்கதகு சக்தித் திட்டத்தினை இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய தூதரக அதிகாரிகள் இதனை பார்வையிட்டுள்ளனர். குறித்த விஜயத்தில் யாழ்.மாவட்ட அரச அதிகாரிகள் மற்றும் தீவக பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



