ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஆதரவளித்தமைக்காக மன்னிப்பு கோரிய ஆசிரியர்
Prathees
3 years ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தமைக்காக முன்னணி ஆசிரியர் திஸ்ஸ ஜனநாயக்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
ஜனநாயக்க விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
“இந்த நாட்டின் குடிமக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக நான் ஏமாற்றப்பட்டேன்.
ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்ற நம்பிக்கையின் பேரில் தானும் பலருடன் இணைந்து அவருக்கு ஆதரவளித்ததாக திஸ்ஸ ஜனநாயக்க தெரிவித்தார்.
முன்னோக்கிச் செல்லும்போது எந்தவொரு தனிநபருக்கும் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் நடுநிலைமையுடன் இருப்பேன் என்றும் ஜனாநாயக்க மேலும் கூறினார்.



