ஏப்ரல் 5 முதல் 8 வரையான மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை பின்வருமாறு.

#SriLanka #Power #Time
ஏப்ரல் 5 முதல் 8 வரையான மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை பின்வருமாறு.

நாளையதினம் (05) முதல் எதிர்வரும் ஏப்ரல் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC1 ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் பல்வேறு கட்டங்களில் 3½ மற்றும் 6½ மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை (05) மின்வெட்டு:

ABCDEFGHIJKL : 6½ மணித்தியாலங்கள்
- மு.ப. 8.00 - பி.ப. 5.00 வரை 4 மணித்தியாலங்கள்
- பி.ப. 5.00 - இரவு 10.00 வரை 2½ மணித்தியாலங்கள்

PQRSTUVW: 6½ மணித்தியாலங்கள்
- மு.ப. 10.00 - பி.ப. 6.00 வரை 4 மணித்தியாலங்கள்
- பி.ப. 6.00 - இரவு 11.00 வரை 2½ மணித்தியாலங்கள்
CC1 : 3½ மணித்தியாலங்கள்
- மு.ப. 6.00 - மு.ப. 9.30 மணி வரை 3½ மணித்தியாலங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது