அனைத்து கட்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி அழைப்பு: தினேஷ்

Prabha Praneetha
3 years ago
அனைத்து கட்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி அழைப்பு: தினேஷ்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக சபைத் தலைவர் தினேஸ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திரு.குணவர்தன, கட்சித் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் அனுப்பப்படும் என்றார்.

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை சற்றுமுன் வெளியிடப்பட்டது குறித்து விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.

“ஐஎம்எப் அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் நல்லது, அது விவாதிக்கப்படும். ஜனாதிபதி அழைக்கும் சர்வகட்சி மாநாட்டிலும் இது குறித்து விவாதிக்க முடியும்” என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கட்சித் தலைவர்களுக்குக் கிடைக்கப்பெறும் என்று திரு.குணவர்தன உறுதியளித்தார்.

"IMF அறிக்கை ஏற்கனவே ஒரு பொது ஆவணம், ஆனால் அனைத்துக் கட்சி மாநாடு தொடங்குவதற்கு முன்பே கட்சித் தலைவர்களுக்கு வெளியிடப்படுவதை நாங்கள் பார்ப்போம்," என்று அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!