இலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் பாடசாலை மாணவி!

#SriLanka #Murder #Student
Nila
4 years ago
இலங்கையில்  கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் பாடசாலை மாணவி!

ஹாலிஎல - உடுவர ஏழாம் கட்டைப்பகுதியில் 18 வயதுடைய மாணவி ஒருவர் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹாலி எல பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்றுவந்த மாணவி ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி பாடசாலை முடிந்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில், ஆயுதமொன்றில் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதுடன், கொலை சம்பவம் தொடர்பாக ஹாலி எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நீண்ட காலம் நிலவிய முன் பகை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4