பண்டிகைக் காலத்தில் நாடு முடக்கப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

#Corona Virus
Mayoorikka
2 years ago
 பண்டிகைக் காலத்தில் நாடு முடக்கப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டை மூடவேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

எவ்வாறெனினும், நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சுகாதார கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டுமென பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.