ரஷ்ய அதிபர், அமெரிக்க அதிபர்களுக்கிடையே பேச்சுவார்த்தை.
#world_news
#United_States
Mugunthan Mugunthan
3 years ago

ரஷ்ய ஜனாதிபதி கிளாடிமர் புடினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்குமிடை நாளை பேச்சுவார்த்தை காணொளி வழியே நடைபெறவிருக்கிறது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின், விடுதலை பெற்று தனி நாடாக மாறியது.
கடந்த 2014-ம் ஆண்டில் உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீண்டும் ரஷ்யா வசம் சென்றது. இதையடுத்து, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, உக்ரைன் மீது படை எடுக்க 1.75 லட்சம் ராணுவ வீரர்களை எல்லைப்பகுதியில் ரஷ்யா நிலைநிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது சம்பந்தமாக ரஷ்ய ஜனாதிபதியுடன் காணொளியில் ஒரு உரையாடல் நடைபெறவிருக்கிறது



