இளைஞனை தாக்கிய ஐவர் கொண்ட குழு! - இணையத்தில் பரவிய காணொளியை அடுத்து காவல்துறை விசாரணை..!

இளைஞன் ஒருவனை ஐவர் கொண்ட குழு ஒன்று மோசமாக தாக்கிய சம்பவம் ஒன்று Essonne மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி Montgeron நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்று மாலை 6.30 மணி அளவில் 17 வயதுடைய இளைஞன் ஒருவனை குறைந்தது *ஐவர் கொண்ட குழு ஒன்று தாக்கியுள்ளது. இளைஞனை கீழே விழுத்தி காலால் உதைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் தாக்குதல் நடத்திய குழுவினாலேயே காணொளியாக படம்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த காணொளி டுவிட்டர் வலைத்தளத்தில் பகிரப்பட்டு, வேகமாக பரவியுள்ளது.
அதை அடுத்து, இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நேற்று செப்டம்பர் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Evry நகர அரச வழக்கறிஞனர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.
தாக்குதல் ஈடுபட்டவர்கள் சிலரை Montgeron நகர காவல்துறையினர் நன்கு அறிவார்கள் எனவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



