பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியால் தற்போது பல தமிழர்களுக்கும் பிரச்சினை

Nila
3 years ago
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியால் தற்போது பல தமிழர்களுக்கும் பிரச்சினை

வாகன எண்ணெய் நிறுவனமான பிபி பல எண்ணெய் நிரப்பும் நிலையங்களை மூடி இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு காரணம் எண்ணெய் சுத்தம் செய்யும் நிலையங்களில் இருந்து எடுத்து வருவதற்கு ஓட்டுனர்கள் இல்லாத குறை என்று அறிவித்துள்ளது.

ஐக்கிய ராச்சியத்தில் 1200 எண்ணெய் நிரப்பும் நிலையங்களை நடத்தி வரும் பிபி இந்த சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தது.

பிரதான சாலைகள் உள்ள இடங்கள், பிரதான டிரக் வீதிகள் மற்றும் அதிகமாக எண்ணெய் தேவைப்படும் இடங்களில் அதிமாக எண்ணையை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிபி தெரிவிக்கின்றது.

எஸ்ஸோ எண்ணெய் விற்பனை நிறுவனம் தெரிவிக்கையில் டெஸ்கோவில் உள்ள தமது 200 எண்ணெய் விற்பனை நிலையங்களும் பாதிக்கப்படு உளளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை டிரக் ஓட்டுனர் பற்றாக்குறை பிரித்தானியாவில் உணவு விநியோகத்தில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரித்தானியாவில் தற்போது உள்ள நிலையில் 90,000 டிரக் ஓட்டுனர்கள் தேவைப்படுகிறார்கள். கோவிட் தொற்றின் காரணமாக புத்திய ஓட்டுனர்கள் டிரக் ஓடுவதற்கு தகுதியாகவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறு இருக்க பிரித்தானியாவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடியான டெஸ்கோ தெரிவிக்கியில் ஓட்டுனர் பற்றாக்குறையின் காரணமாக கிறிஸ்துமஸ் நேரம் நெருங்கும் வேளையில் மக்கள் பீதியில் பொருள்களை வாங்க வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது. அதேவேளை சிறு வியாபார அமைச்சர் பால் ஸ்கல்லி தெரிவிக்கையில், மக்கள் பீதியில் பொருள்களை வாங்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இதனால் பெற்றோல் டீசல் விலைகளும் அதிகரித்துள்ளதோடு, பெற்றோர் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான பெற்றோல் நிலையங்களில் வேலை செய்து வந்த பல தமிழர்களும் வேலையின்மை பிரச்சினையால் அவதியுற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!