ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது இலக்கு வைக்கப்பட்ட ரஷ்ய சைபர் தாக்குதல்கள்.

ஜெர்மன் பாராளுமன்ற தேர்தலுக்கு சற்று முன்பு, ஐரோப்பிய ஒன்றிய, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது இலக்கு வைத்து ஹக்கிங் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் இலக்கு வைக்கப்பட்ட சைபர் தாக்குதல்கள் மற்றும் விளைவுகள் அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டுகிறது. தீங்கிழைக்கும் நடவடிக்கைகள் பல பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பத்திரிகை மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளை இவை குறிவைத்துள்ளன.
தாக்குதல் நடத்தியவர்கள் கணினி அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட கணக்குகளை அணுகி தரவுகளை திருடிய கூறப்படுகிறது.
கோஸ்ட்ரைட்டர் என்ற பெயரில் பிரச்சாரத்தின் காரணமாக, ஜெர்மன் அட்டர்னி ஜெனரல் இரண்டு வாரங்களுக்கு முன்பே ஒரு விசாரணையை தொடங்கிளார். அந்த நேரத்தில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.



