இலங்கை புத்தக வாசகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! பொலிஸ் மாஅதிபர் அவசர கோரிக்கை
#SriLanka
Yuga
3 years ago

நாட்டிலுள்ள அனைத்து புத்தக விற்பனை நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்ன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, பொலிஸ் மாஅதிபர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள புத்தக நிலையங்களை திறப்பதற்கு தேவையான சுகாதார பரிந்துரைகளை வழங்குமாறும், பொலிஸ் மாஅதிபர், சுகாதார சேவைப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்



