இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை முதல் தடுப்பூசி!
#SriLanka
#children
#Covid Vaccine
Yuga
3 years ago

விசேட தேவையுடைய மற்றும் தொற்றா நோய் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ள 12 வயது தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட சிறார்கள் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை
எதிர்வரும் 24ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.
இதேவேளை, இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை பொரள்ளை ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன குறிப்பிடுகின்றார்.



