கொலையாளிகளை கண்டுபிடிக்குமாறு கோரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன் போராட்டம்
#Jaffna
#Protest
Prathees
3 years ago

சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்திற்கு அரகாமையில் வீதியோரமாக விழுந்து கிடந்த இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போது குறித்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீரிமலை நல்லிணக்கபுரத்தை சேர்ந்த ம. ஜெனுசன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்கொலையாளிகளை கைது செய்யக்கோரியே உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.



