சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டங்கள்..!!

#Switzerland
Keerthi
3 years ago
சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டங்கள்..!!

சுவிட்சர்லாந்தில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில், புகலிட கோரிக்கையாளர்களுடைய தகவல்களை அறிய, அவர்களின் செல்போன்கள், கணினி, மடிக்கணினி மற்றும் யூஎஸ்பி ஸ்டிக்குகள் போன்றவற்றை ஆராய்வதற்கு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் சட்டமானது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகள், "இது மனித உரிமை மீறல்" என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எனினும், இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ஒரு புகலிடக் கோரிக்கையாளரின் தகவல்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படும் போது தான், இந்த சட்டத்தை அதிகாரிகள் பயன்படுத்துவார்கள் என்று நீதித்துறை அமைச்சரான Karin Keller-Sutter தெரிவித்திருக்கிறார்.

மேலும், நாடு கடத்தப்படவுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு, கொரோனா பரிசோதனை கண்டிப்பாக மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானத்தையும் நாடாளுமன்றம் அனுமதித்திருக்கிறது. இந்த சட்டமானது, 15 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சட்டம், வரும் 2022-ஆம் வருடம் வரை நடைமுறையில் இருக்கும்.

அதாவது, சமீப தினங்களாக புகலிடம் கோரும் பலரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. அதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசு தரப்பு தெரிவித்திருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!