மின்சாரக் கட்டணத்தை செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர்

#Gamini Lokuge #Electricity Bill
Prathees
3 years ago
மின்சாரக் கட்டணத்தை செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர்

மின்சார சபை கடுமையான பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மின்சார பாவனையாளர்கள் தொடர்ச்சியாக மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் மின்சார சபை கடுமையான பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது.

கட்டணத்தை செலுத்த கூடியவர்களும் செலுத்துவதில்லை. அது தான் பிரச்சினை. 

கட்டணத்தை செலுத்துவதற்காக பாவனையாளர்களை ஊக்கப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றும் இரண்டு மூன்று மாதங்கள் இவ்வாறு சென்றால் நாம் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிவரும் என அமைச்சர் தெரிவித்தார்.

´தற்போது சுமார் 44 பில்லியன் ரூபாய் மின்சார கட்டணம் அறவிடப்படவுள்ளது. எனினும் அதற்கு நாம் வட்டி அறவிடவில்லை. 12மூ இடைக்கால கொடுப்பனவை வழங்கி அவர்களை நாம் ஊக்கப்படுத்தியுள்ளோம். முடிந்தளவில் மின்சார கட்டணத்தை செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!