காணிப் பிரச்சினையில் தாயின் தலையை வெட்டி கொலை செய்த மகன்

காணிப் பிரச்சினை காரணமாக தனது தாயின் கழுத்தை மகன் வெட்டிய சம்பவம் குருநாகல் மாவட்டத்தில் பண்டுவஸ்நுவர பிரதேசத்திற்கு அருகில் பரம்பொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தாய் தனது மகன் மற்றும் இரண்டு மகள்களுக்குச் சொந்தமான பல நிலங்களை சட்டப்பூர்வமாக எழுத்து மூலம் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அதன்பிறகு தாய்க்கு சொந்தமான மற்றொரு நிலத்தை தனக்கு எழுதும்படி மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் மகனின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத தாயை தேங்காய் வெட்டும் கத்தியால் தாயின் தலையை வெட்டியுள்ளான்.
அப்புஹாமி ஆராச்சிலகே சுமனாவதி மேனிகே (68) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்த மகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பரம்பொலவில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
மீதமுள்ள நிலத்தை எழுதித் தருமாறு மகன் தாயிடம் பலமுறை அழுத்தம் கொடுத்ததாகவும் தாயுடன் சண்டையிட்டு அவரைத் தாக்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனது கணவர் தேங்காய் பறித்து வாழ்ந்து வருவதாகவும் கொலை நடந்த இரவில் நிலம் தொடர்பாக தனது தாயுடன் தகராறு செய்ததாகவும் கொலை செய்தவரின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
119 பொலிஸ் அவசரகால பதில் பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி, ஹெட்டிபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர் மற்றும் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை வீட்டினுள் கண்டுபிடித்தனர்.
சந்தேக நபரின் மகன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டு, கொலை தொடர்பாக ஹெட்டிபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிடடனர்.



