கப்ராலிடமிருந்து காலியாக உள்ள எம்பி பதவியை யார் நிரப்புவார்?

#Ajith Nivat Cabral #Central Bank
Prathees
3 years ago
கப்ராலிடமிருந்து காலியாக உள்ள எம்பி பதவியை யார் நிரப்புவார்?

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளநிலையில், அவருக்கு பதிலாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்டகொட நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜயந்த கெடகொட அண்மையில் தனது தேசியப்பட்டியல் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில் , அஜித் நிவர்ட் கப்ரால் தனது ராஜினாமா கடிதத்தை வரும் திங்கட்கிழமை காலை நாடாளுமன்ற பொதுச்செயலாளரிடம் கொடுக்க உள்ளார்.

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அஜித் நிவர்ட் கப்ரால் முன்பு 2006-2015 வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றினார்.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பின்னர் நிதி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றார்.

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. திரு. லக்ஷ்மன் செப்டம்பர் 14 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்ததாக அவர் நேற்று (10) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக ஏற்பட்ட சில மனக்குறைகள் காரணமாக திட்டமிட்டதை விட முன்னதாகவே ஓய்வு பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!