இன்றைய வேத வசனம் (11.9.2021)

#Prayer #spiritual #Holy sprit
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் (11.9.2021)

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

சிலருக்கு மனிதர்களைக் குறித்த பயம்! சிலருக்கு அசுத்த ஆவிகளைக் குறித்த பயம்! சிலருக்கு சூழ்நிலைகளைப் பார்த்து பயம்! சிலருக்கு எதாவது வியாதி வந்து விட்டால், பயம்!

சிலருக்கு தங்களுடைய தேவைகளை நினைத்தால் பயம்! சிலருக்கு எதிர்காலத்தைக் குறித்த பயம்! சிலருக்கு சொப்பனம் பார்த்தால் பயம்!

இப்படிபாக பல விதமான பயங்கள் இருக்கிறது. இதில் எல்லாவற்றையும் விட மிகவும் கொடூரமான பயம், மரண பயம்!

இன்றைக்கு, உங்களுக்குள் இப்படிப்பட்ட மரண பயம் இருக்கிறதா? “சிலர் இந்த மரண பயத்தினால் பாதிக்கப்பட்டு, நிம்மதியாகத் தூங்கக் கூட முடியாமல், விடிய விடிய விழித்துக் கொண்டே இருப்பார்கள்! என்பதாக, என் ஊழியத்தின் பாதையில் அனேக முறை நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

ஒருமுறை ஒரு சகோதரர் என்னை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, “பிரதர், எனக்கு எதைப் பார்த்தாலும் பயமாகவே இருக்கிறது! பஸ்ஸில் போகும்போது, விபத்து ஏற்பட்டு மரித்துப் போய் விடுவேனோ? என்கிற பயம்!

அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது,

ஃபேன் அறுந்து என் உச்சந் தலையில் விழுந்து மரித்துப் போய் விடுவேனோ? என்கிற பயம்!

நடந்து போனால், எதாவது கார் மோதி மரித்துப் போய் விடுவேனோ? என்கிற பயம்!

இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்க முடியாமல், எப்போதும் எனக்கு பயமாகவே இருக்கிறது! ''என்று சொன்னார்.

அப்போது நான் அவரிடத்தில், “இரவு நேரங்களில் கூட ஏன் உங்களால் தூங்க முடியவில்லை?" என்று கேட்டேன்.

அதற்கு அவர், கண்களை மூடித் தூங்கிக் கொண்டிருக்கும் போதே நான் மரித்துப் போய் விடுவேனோ? என்று பயமாக இருக்கிறது! "என்று மிகுந்த வேதனையோடு சொன்னார்.“

ஒரு மனிதனுக்குள் எப்படியெல்லாம் பயம் வருகிறது! என்று பாருங்கள்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே அப்படிப்பட்ட மனிதர்களுக்கு பயத்திலிருந்து விடுதலையைக் கொடுக்க வல்லமை உள்ளவராக இருக்கிறார்!
ஆகவே, பயப்படாதிருங்கள்!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த மரண பயத்திலிருந்து எப்படி நமக்கு விடுதலை தருகிறார்?

"அவரும் (இயேசு கிறிஸ்துவும்) அவர்களைப்போல (நம்மைப் போல) மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்.” (எபிரெயர் 2:14,15) என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது.

பிசாசானவனை தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் ஏன் மரித்தார்?

ஏனென்றால், மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவன், அதை வைத்துத்தான் மனிதர்களை பயமுறுத்திக் கொண்டிருந்தான். ஆகவேதான், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணத்தை தைரியமாக சந்தித்து, மரித்து உயிர்த்தெழுந்த பொழுது, பிசாசின் கிரியைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுப் போய் விட்டது!

அதாவது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்குள் வந்து விட்டால், அந்த மரண பயம் உங்களை விட்டுப் போய் விடும், அவ்வளவுதான்!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அடிக்கப்படும்போது, “ஐயோ... அம்மா, என்னை அடித்துக் கொல்கிறார்களே! ”என்று சொல்லி, மரணத்தைக் கண்டு பயப்படவில்லை.

“பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்! ”என்று சொல்லி, சந்தோஷமாக மரணத்தை மேற்கொண்டார்!

அதற்குப் பிறகு, 'ஸ்தேவான்' 'யாக்கோபு' போன்ற பரிசுத்தவான்கள் எல்லாம் தேவனாகிய கர்த்தருக்காக தைரியமாக மரணத்தை சந்தித்தார்கள்.

பரிசுத்த பவுல், “மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே?” என்று மரணத்தைப் பார்த்து தைரியமாகக் கேட்டார்!

பயம் பரிசுத்த ஸ்தேவான் மீது கற்கள் வீசப்பட்டு, இரத்தம் வடிய வடிய மரித்துக் கொண்டிருக்கும்போது, “ஐயோ... அம்மா, சாகிறேனே ! என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று சொல்லி, அவர் கதறிக் கொண்டிருக்கவில்லை!

“பிதாவே, உம்முடைய கைகளில் என்னை ஒப்புவிக்கிறேன்! ”என்று சொல்லி, மரணத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்தார்!

இந்த, 'மரண இருள்!' என்பது, பிசாசினால் வரக் கூடியது! “இருளே, போ, போ!” என்று சும்மா சொல்லிக் கொண்டிருந்தால் , போய் விடாது.

பொதுவாக, இருள் விலக வேண்டுமென்றால், அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அதாவது வெளிச்சம் வர வேண்டும்! வெளிச்சம் வந்து விட்டால், இருள் தானாகவே போய்விடும்!

அதே போலத்தான், ஒரு மனிதனுக்குள் இருக்கிற மரண இருளின் ஆவி விலக வேண்டுமானால், வெளிச்சமாகிய இயேசு கிறிஸ்து அவனுடைய உள்ளத்திற்குள் வர வேண்டும். அப்படி வந்து விட்டால் போதும், அந்த மரண தானாகவே மாறிப் போய் விடும், அவ்வளவுதான்!

ஆகவே, மரணத்தையே ஜெயித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு இருக்கும்போது, நீங்கள் ஏன் மரணத்தைக் குறித்து பயப்பட வேண்டும்?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏன் மரணத்தை ருசி பார்க்க வேண்டும்? அதாவது, மரண பயத்திலிருக்கிற மக்களுக்கு விடுதலையைக் கொடுக்க வேண்டுமானால், அந்த மரணத்தின் வழியாக அவர் போய்தான் ஆக வேண்டும்!

அதனால்தான் அவர் சிலுவையில் நமக்காக மரிக்க தன்னையே ஒப்புக் கொடுத்து, மரணத்தின் வழியாய் கடந்து போய், அந்த மரணத்தை ஜெயித்து, உயிர்த்தெழுந்தார்!

இன்றைக்கு உங்களுக்குள் இருக்கிற மரண பயம் உங்களை விட்டு மாறிப் போகும்! தேவ பிள்ளைகளாகிய நமக்குள் மரண பயமே இருக்கக் கூடாது.

ஒருவேளை நமக்கு மரணம் நேரிடுவதாக இருந்தால் கூட, “ஐயோ! மரித்துப் போய் விடுவேனோ?" என்கிற அந்த பயம் இருக்கக் கூடாது.

“மரணமே! வா, உன்னை சந்திக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்!” என்று சொல்லி, தைரியமாக நாம் அதை சந்திக்க வேண்டும்!

தேவனாகிய கர்த்தர் நமக்குள் இருக்கிற மரண பயத்தை மாற்ற வல்லமை உள்ளவராக இருக்கிறார்! ஆகவே, பயப்படாதீர்கள்! ஆமென்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!