இன்றைய சுவிஸ் செய்திகளின் தொகுப்பு 03.09.2021

சுவிற்சலாந்தில் மகுடநுண்ணித்தொற்று பற்றிய தகவல்
செப்டம்பர் 1ம் திகதி தரவுகளின் படி வைத்தியசாலையில் 275 பேர் அனுமதிக்கப்பட்டனர். 5 பேர் இறந்துள்ளனர். 04.01.2020 தொடக்கம் 01.09.2021 வரையில் மொத்தம் சுவிஸில் 782294 கொவிட் தொற்றுக்கள் உண்டாகியுள்ளன.
அதிகரித்துவரும் கொவிட் தொற்றுகாரணமாக வைத்தியசாலைகளில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. அதனால் அவசரமற்ற சத்திர சிகிச்சைகள் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு அனுமதி 85 சராசரியாக காணப்பட்ட போதிலும் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. இறப்புக்களானது நாலுக்கு 1 லிருந்து தற்போது 6 ஆக மாறியிருக்கிறது.
தற்போது கொவிட் கட்டுப்பாடுகள் சுவிஸில் குறைவாக்கி விட்டிருந்தபோதிலும் செப்டம்பர் அதிகரிக்கவும் இதேவேளை கொவிட் சான்றிதழை மேலும் அமுல்ப்படுத்தவும் தீர்மானித்துள்ளனர். 9.6 மில்லியன் டோஸ்கள் ஏற்றப்பட்ட நிலையில் 52வீதமானவர்கள் இரண்டு தடுப்புசிகளையும் பெற்றுவிகொண்டுள்ளனர். இது முன்னைய நிலையிலும் அதிகமாகும்.
இதுவரை 10500 கொவிட் மரணங்கள் சுவிற்சலாந்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
- கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறைக்கு நிதியுதவி வழங்கிய சுவிட்சர்லாந்து
- சுவிற்சலாந்தில் ஏறிய வீட்டுவாடகை
- சுவிற்சலாந்தில் உள்ள மீன் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு விழிப்புணர்வு
- சுவிற்சாலந்து வியொக்ஸ் எம்மோசம் நீர்தேக்கத்தில் மிதமிஞ்சியுள்ள நீர்
விரிவான செய்திகளை பார்வையிட >>>



