எல்லாம் மாறும் ஓர் நாளில்

Reha
3 years ago
எல்லாம் மாறும் ஓர் நாளில்

எல்லாம் மாறும் ஓர் நாளில் 

என்று எழுடா இத் திருநாளில்

பொல்லா துன்பம்  ஓடி மறைய

புகழாய் மாறுவாய் இவ் வாழ்வில்

நம்பிக்கை ஒன்றே பேராயுதம்

நம்பி வணங்கு அதுவே முதல் ஆலயம்

தும்பிக்கையை விட பலமாயிரம்

துதித்து எழுடா சுகம் உனதாகிடும்

எத்தனை எத்தனை வலிகள் உன்னை தொடர்ந்தாலும்

அத்தனையும் வழிகளாய் உனக்கும் திசைகாட்டும்

கத்தியில் நடக்கும் வாழ்க்கை இது என்றாலும்

புத்தியில் உயிர்க்க - நாளை புடம் போட்டிடும்

பக்தியில் உருகி கொஞ்சம் அவன் பாதம் போற்றிடு

படைத்தவன் உள்ளான் என எழுந்து நடை போட்டுடு

வருவது எல்லாம் வரட்டும் - தருவதை எல்லாம்

தரட்டும்

வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடக் கற்றுக் கொள்....!

வெற்றி பெற்று உலகானாவர் மட்டுமல்ல

வாழ்ந்து முடிப்பது கூட வரலாறுதான் என்ற வாசகத்தை- மனதில் வை

மாயைகள் உளைச்சல்களுக்கு மறுநொடியே

தீயை வை

அடி உடை தகர்த்தெறி

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!