சண்டை போடாதே.......!

சண்டை போடாதே.......!

இந்தக் குறிப்பு பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

ஒரு காட்டில் இரண்டு நாய்கள் ஒன்றாக வசித்தன. ஒரு நாள், இரண்டும் ஒரு மானை வேட்டையாடின. ஆனால் அதைப்பங்கு பிரிப்பதில் சண்டை வந்துவிட்டது. அதனால், அவை இரண்டும் அதே காட்டில் இருந்த வயதான சிங்கத்திடம் சென்று உதவி கேட்டன.

அந்தச் சிங்கத்திற்கு வயதானதால், முன்பு போல வேட்டையாட முடியவில்லை. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது. அந்த மான் இறைச்சியை வேண்டுமென்றே ஒன்று சிறிதாகவும், ஒன்று பெரிதாகவும் பிரித்து ”ஆஹா, ஒன்று பெரிதாகி விட்டதே, சரி இதில் கொஞ்சம் எனக்கான தீர்ப்புக் கூலியாக எடுத்துக்கொள்கிறேன், என்று சொல்லி, கொஞ்வம் கடித்துக்கொண்டது.

பிறகு, மற்றொன்று பெரிதாக இருக்கிறது எனச் சொல்லி அதிலிருந்தும் சிறிது கடித்துக்கொண்டது. 

இப்படியே அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் கடித்துக் கடித்து, இறுதியில் எலும்புகள் மட்டுமே இருந்தன.

என்னால் பிரி்க்க முடியவில்லை. இந்த எலும்புகளையாவது நீங்கள் சரியாகப் பிரித்துக்கொள்ளுங்கள். என்று சொல்லிவிட்டு சிங்கம் நகர்ந்தது.

சிங்கத்திடம் முறைத்துக்கொள்ள முடியாது. என நினைத்த இரண்டு காட்டு நாய்களும் என்ன செய்வது?  இனியாவது, சண்டைபோடாமல் இருவரும் பகிர்ந்து உண்ணுவோம். என்று சொல்லி, இருவரும் வந்த வழியை நோக்கி ஓடின.