இலங்கையின் முதலாவது மின்கல சக்தி சேமிப்புத் தொகுதி இன்று திறப்பு
#SriLanka
#LANKA4
#Inauguration
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
இலங்கையின் முதலாவது மின்கல சக்தி சேமிப்புத் தொகுதி (Battery Energy Storage System) அநுராதபுரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (18) திறந்து வைக்கப்படவுள்ளது.
புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை தேசிய மின் கட்டமைப்பில் அதிகளவில் இணைத்துக்கொள்வதுடன், மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் இரவு நேரங்களில் அதிகரிக்கும் மின்சாரத் தேவையை தடையின்றி பூர்த்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.