பிரித்தானியாவில் அரண்மனை பாராமரிப்பிற்காக நிதி ஒதுக்கீடு - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்
#Parliament
#LANKA4
#ENGLAND
#Fund
#Palace
#L4
Prasu
1 hour ago
அரச அரண்மனைகளைப் பராமரிக்கவும் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு நிதியளிக்கவும் 2027-28ம் ஆண்டுக்கான £99.9 மில்லியன் இறையாண்மை மானியத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
பக்கிங்ஹாம் அரண்மனையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைவதைப் பிரதிபலிக்கும் வகையில், அரச குடும்பத்திற்கான நிதியுதவியில் ஏற்ற இறக்கங்களை அனுமதிக்கும் விதமாக இந்த இறையாண்மை மானிய சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
குறிப்பாக கடுமையான துன்பத்தை அனுபவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக பொது நிதிகள் திருப்பிவிடப்பட வேண்டும் என்று வாதிட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரையன் லீஷ்மேன் இந்தச் செலவினத்தை எதிர்த்தார்.