சட்டவிரோதமாக வாகனம் வைத்திருந்த குற்றச்சாட்டு - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு ஒத்திவைப்பு
#SriLanka
#CourtOrder
#Court
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
பிணையில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது, சொகுசு வாகனத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, அக்டோபர் 28 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான சட்டதரணி இது மோட்டார் வாகனங்கள் அவசரச் சட்டத்தின் கீழான வழக்கு என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த வழக்கை அக்டோபர் 28 அன்று இறுதி முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.