“இரண்டாண்டு ஆட்சி அல்ல... பொய்களின் பயணம்!” – சஜித் சாடல்
20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அது அவசியமில்லை எனத் தெரிவிப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
ரத்தோட்டையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் உரையாற்றிய அவர், முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எனக் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது சர்வஜன வாக்கெடுப்பு கோரியவர்கள், இன்று ஆட்சியில் இருக்கும்போது நிலையை மாற்றிக்கொண்டுள்ளதாகச் சாடிய சஜித் பிரேமதாச, அரசாங்கம் ஒரே கட்சி ஆட்சியை நோக்கிச் செல்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவுப் பேரணிகளை "பொய்களின் பயணம்" என விவரித்த அவர், தைரியமிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுத்தார்.
மேலும், பேருவளை பேரணியால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், மின்சாரக் கட்டணம் குறைப்பு மற்றும் எரிபொருள் விலை தொடர்பான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே