வாய் தகராறு - தந்தையை கொலை செய்த 16 வயதுடைய சிறுவன்
#SriLanka
#ARREST
#Murder
#Crime
Thamilini
48 minutes ago
மாத்தளையின் உக்குவெல பகுதியில் மகன் ஒருவன், தன் தந்தையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளான்.
அதேபகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மகன் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 16 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மாத்தளை காவல்துறையினர் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே