பிற்பகல் வேளையில் மழையுடன் கூடிய வானிலை எதிர்பார்ப்பு
#SriLanka
#weather
#Rain
#Meteorology
Thamilini
1 hour ago
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
குறித்த மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.
சில இடங்களில் 75 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல சுற்று மழை பெய்யும் எனவும் சூளுரைக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் மின்னல் தாக்கம் மற்றும் சேதங்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே