இலங்கையின் கல்வித்துறையில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்?
#SriLanka
#School
#government
#LANKA4
#Teacher
#licences
#L4
Prasu
1 hour ago
ஆசிரியர்களுக்கும் “Teaching Licence” முறை?
- இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள தேசிய கல்விச் சபை (National Education Council) அமைக்கப்பட்ட பின்னர், அரசுப் பாடசாலை ஆசிரியர்கள் மட்டுமன்றி தனியார் வகுப்புகள் (Tuition Classes) நடத்தும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் அனுமதிப்பத்திரம் (Teaching Licence) வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படலாம் என கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- அதாவது, எதிர்காலத்தில் ஒருவர் ஆசிரியராகக் கற்பிக்க வேண்டுமெனில், குறிப்பிட்ட தகுதிகளையும் தரநிலைகளையும் பூர்த்தி செய்து கற்பித்தல் அனுமதிப்பத்திரம் பெற்றிருக்க வேண்டிய நிலை உருவாகலாம்.
PhD பெற்ற ஆசிரியர்களுக்கு புதிய சம்பள முன்மொழிவு!
- மேலும், முனைவர் பட்டம் (PhD) பெற்ற ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளத்தை பல்கலைக்கழக ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் சமப்படுத்துவது தொடர்பான முன்மொழிவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதன் முக்கிய நோக்கம், உயர்திறன் கொண்ட ஆசிரியர்களை கல்வித்துறையில் தக்கவைத்துக் கொள்வது (Talent Retention) எனக் கூறப்படுகிறது.
தனியார் பாடசாலைகளுக்கும் கட்டுப்பாடுகள்?
- அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்க்கும்போது அறவிடப்படும் கட்டணங்களுக்கும் ஒரு தரநிலை (Standard) ஏற்படுத்தி, அந்தப் பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் Regulatory Mechanism ஒன்றை உருவாக்கவும் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால ஆசிரியர் நியமனங்களிலும் மாற்றம்?
- தேசிய கல்விச் சபை அமைக்கப்பட்ட பின்னர், எதிர்காலத்தில் பட்டதாரிகள் (Graduates) மட்டுமே ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர் கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக் கல்வித்துறையின் பல்வேறு தொழில்முறைப் பிரிவுகளையும் இந்த அமைப்பு உள்ளடக்கும் எனக் கூறப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே