அத்தி இலைக்கும் மருத்துவப் பயன்களா? – பாரம்பரிய அறிவைத் தேடும் பயணம்!
அத்திப்பழம் குறித்து பலரும் அறிந்திருந்தாலும், அத்தி இலையின் பாரம்பரியப் பயன்பாடுகள் குறித்து பலருக்கும் தெரியாது. “உணவே மருந்து – பாரம்பரியத் தேடல்” தொடரின் நான்காம் பகுதியில், அத்தி இலையின் பாரம்பரியப் பயன்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய மருத்துவ முறைகளில் அத்தி இலைகளை சுத்தம் செய்து கொதிக்கவைத்து பானமாக அருந்தும் வழக்கம் காணப்படுவதாகவும், குறிப்பாக இரத்தச் சர்க்கரை அளவைப் பேணுவதற்காக அத்தி இலை பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அத்தி இலைச் சாறு மற்றும் இரத்தச் சர்க்கரை தொடர்பாக சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கொழுப்பு அளவுகள் உள்ளிட்ட உடல்நலக் காரணிகள் தொடர்பாகவும் ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன.
எவ்வாறாயினும், அத்தி இலை அனைத்து நோய்களுக்கும் தீர்வாகும் எனக் கூற முடியாது. அதன் பாரம்பரியப் பயன்பாடுகள் மற்றும் அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளை தனித்தனியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
நமது முன்னோர் இயற்கையில் கிடைத்த பழம், இலை, காய், பட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தங்களது பாரம்பரிய வாழ்க்கை முறையில் பயன்படுத்தி வந்தனர்.
மறந்துபோன பாரம்பரிய அறிவை மீண்டும் தேடி, அதன் பின்னணியில் உள்ள உண்மைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே