சீருடைகள் இனம், மதம் மற்றும் மொழி அடிப்படையில் இன்றி தொழில் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும் - லங்கா4
வணக்கம் லங்கா4 ஊடக நேயர்களே! மீண்டும் ஒரு சிறப்பு தகவலுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இலங்கை தமிழ் மற்றும் சிங்களம் பேசும் மக்கள் வாழுகின்ற ஒரு சிறிய நாடு என்பதாலும் பல மதங்கள் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாடு என்பதாலும் அந்த நாட்டிலே ஒரு சில முக்கியமான சட்டதிட்டங்கள் உள்ளன.
அதில், அரசு நிறுவனங்கள், முக்கியமான பொது மற்றும் சிவில் துறைகளில் அனுமதிக்கப்பட்ட சீருடைகள் தொடர்பாக பல வதந்திகள், பல உண்மைகள், பல நியாயங்கள், பல அநியாயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் லங்கா4 ஊடகம் முன்வைக்கின்ற விடயம் என்னவென்றால், பல இனங்கள், பல மதங்கள் சேர்ந்து வாழுகின்ற இந்த நாட்டில் சீருடை என்று அரசினால் சட்டபூர்வமாக கொண்டுவரப்பட்ட இடத்தில் இனமோ, மொழியோ, மதமோ இன்றி அந்தத் தொழிலுக்கேற்ற சீருடையை அணிய வேண்டும் என்று லங்கா4 ஊடகம் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கின்றது.
இந்தக் கருத்துக்கு நீங்கள் உங்களது அபிப்பிராயங்களை சுத்தமான பரிசுத்த ஈழத் தமிழிலே பொறிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்றி, வணக்கம். இலங்கையன்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே