அதிபர்களுக்கான கொடுப்பனவு, பதவி உயர்வு நிபந்தனைகள் வெளியீடு!

#SriLanka #LANKA4 #Principal #conditions #promotion #ADDA #ADDAADS #SHELVA #ADDAPOOJA
Lakhi
1 hour ago
அதிபர்களுக்கான கொடுப்பனவு, பதவி உயர்வு நிபந்தனைகள் வெளியீடு!

மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு நிபந்தனைகள் தொடர்பான விரிவான விவரங்களைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அதிபர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை விவரம் இலங்கை கல்வி நிர்வாக சேவை: தேசிய பாடசாலைகளில் 133, மாகாண பாடசாலைகளில் 27 என மொத்தம் 160 பணியிடங்கள் காணப்படுகின்றன.

தேசிய பாடசாலைகளில் 139, மாகாண பாடசாலைகளில் 7,125 என மொத்தம் 7,264 பணியிடங்கள் உள்ளன. மாகாண பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த 2,494 பேர் பதில் அதிபர்களாகப் பணிபுரிகின்றனர்.

பாடசாலை வகைகளின் அடிப்படையில் அதிபர்களுக்குப் பின்வருமாறு கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

: 1AB பாடசாலைகள்

: ரூ. 8,000 1C பாடசாலைகள்

: ரூ. 5,500 வகை 2 பாடசாலைகள்

: ரூ. 4,500 வகை 3 பாடசாலைகள்

: ரூ. 4,000 அத்துடன், கஷ்ட மற்றும் அதிகஷ்ட பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களுக்குக் கஷ்டக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.

தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு எரிபொருள், போக்குவரத்து உள்ளிட்ட கொடுப்பனவுகள் அதிகபட்சமாக ரூ. 25,000 வரை வழங்கப்படுகின்றன.

3ஆம் தரத்திலிருந்து 2ஆம் தரத்திற்கும், 2ஆம் தரத்திலிருந்து 1ஆம் தரத்திற்கும் பதவி உயர்வு பெறத் தலா 6 ஆண்டுகள் சேவைக்காலம் அவசியமாகும்.

எனவே 3ஆம் மற்றும் 2ஆம் தரங்களிலிருந்து அடுத்த தரத்திற்குப் பதவி உயர்வு பெறத் தலா 6 ஆண்டுகள் சேவைக்காலம், வேதன ஏற்றங்கள், மொழி மற்றும் இணைப்புத் திறன் தேர்ச்சிகள் மற்றும் திறன் விருத்தி பயிற்சிகள் என்பன அவசியமாகும்.

மேலும், 1ஆம் தரப் பதவி உயர்வுக்கு முதுகலை கல்வி டிப்ளோமா அல்லது பட்டப்படிப்பு தகுதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4