பெங்களூருவில் 2 மகள்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற நபர்
பெங்களூருவில் உள்ள ஒரு 5-நட்சத்திர ஹோட்டலில், படுக்கையில் இரண்டு குழந்தைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் தந்தை கழிப்பறையில் படுகாயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்.
இது ஒரு கொலை-தற்கொலை வழக்காக சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
40 வயதான எஸ்.ஜி. இம்ரான், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், கழிப்பறையில் கிடந்தார். அவரது 10 மற்றும் 5 வயது மகள்களின் உடல்கள் சில மீட்டர்கள் தொலைவில் கண்டெடுக்கப்பட்டன.
அந்த நபர், ஹோட்டலின் பாதுகாப்பு ஊழியர்களால் நகரத்தின் மணிபால் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இம்ரான் தனது மனைவிக்குத் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதாகச் சந்தேகித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
"என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர நான் விரும்பவில்லை, அதனால் அவர்களையும் என்னையும் கொன்றுவிட முடிவு செய்தேன்," என்று அவர் கூறியதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே