2.5 மில்லியன் டொலர் வழக்கு – விசாரணை நிலவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு
#SriLanka
#Court Order
#Investigation
#Lanka4
#Case
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
மத்திய திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் மூன்றாம் தரப்பினரின் கைக்குச் சென்ற சம்பவம் தொடர்பில், எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (05) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை, அரசாங்க நிதியியல் பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவினால் கடந்த மாதம் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, குறித்த பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை இன்று நீதிமன்றத்தில் அறிவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே