கனடாவில் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் மரணம்
கனடாவின் ஸ்டோனி டிரெயில் சாலையில் தவறான திசையில் சென்ற வாகனம் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய பாதையில், சூட்'இனா பார்க்வே அருகே நிகழ்ந்துள்ளது. அப்போது, வடக்கு நோக்கிய பாதையில் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த 30 வயது நபர் ஓட்டி வந்த 2011 மெர்சிடிஸ் பென்ஸ் C350, எதிரே வந்த 2016 சுபாரு இம்ப்ரேசா மீது மோதியதாக காவல்துறை நம்புகிறது.
"சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததையும், மற்றொரு கார் கடுமையாக சேதமடைந்திருந்ததையும் கண்டறிந்தனர்" என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளது.
ஒரு அறிக்கையில், கால்கரி தீயணைப்புத் துறை, சம்பவ இடத்திற்கு வந்தவுடன், குழுவினர் "உடனடியாக தீவிர தீயணைப்புப் பணியைத் தொடங்கினர்.
மெர்சிடிஸ் காரில் இருந்த ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட மூவரும், சுபாரு காரில் தனியாக இருந்த 43 வயது ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
52 வயது பெண் ஒருவர் ஓட்டி வந்த செவி ஈக்வினாக்ஸ் காரும் மெர்சிடிஸ் மீது மோதியதாக காவல்துறை தெரிவித்தது. அவரும் மூன்று இளைஞர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே