மஹர சிறைச்சாலை மோதல்: அனைத்து சிறைச்சாலைகளிலும் அவசர பாதுகாப்பு ஏற்பாடுகள்.

#SriLanka #Lanka4 #Security #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #clash #MaharaPrison
Lakhi
2 hours ago
மஹர சிறைச்சாலை மோதல்: அனைத்து சிறைச்சாலைகளிலும் அவசர பாதுகாப்பு ஏற்பாடுகள்.

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, வெலிக்கடை, மெகசின், களுத்துறை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதான சிறைச்சாலைகளில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மஹர சிறைச்சாலையில் கைதிகளிடையே தீவிர அமைதியின்மை ஏற்பட்டது.

இதன் போது சிலர் சிறையிலிருந்து தப்பிச்செல்ல முயன்றதுடன், சிறைச்சாலை கட்டடங்களுக்கும் தீ வைத்ததால் பெரும் பதற்றம் நிலவியது.

இந்த மோதலில் 33 வயதுடைய கைதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்தையடுத்து, காவல் துறையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து முன்னெடுத்த அதிரடிக் கூட்டு நடவடிக்கையின் மூலம் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மேலும், இந்த வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்த 8 பேர் தற்போதும் ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4