மஹர சிறைச்சாலை கலவரத்தால் 15 கோடி ரூபாய் சேதம் - சிறைத்துறை தகவல்
நேற்றைய கலவரத்தின் போது மஹர சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ. 15 கோடியைத் தாண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் மோதலின் போது ஏராளமான சிறை சொத்துக்கள் சேதமடைந்ததாகவும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
சிறை வளாகத்திற்குள் உள்ள பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன; கூரை ஓடுகள் அழிக்கப்பட்டன மற்றும் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டன.
தையல் உள்ளிட்ட தொழிற்பயிற்சி மறுவாழ்வு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் சேதமடைந்தன.
"சாத்தன்", "அசார்", "பெட்டா" மற்றும் மற்றொரு கைதி என அடையாளம் காணப்பட்ட நான்கு கைதிகளால் இந்தக் கலவரம் வழிநடத்தப்பட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 104 கைதிகளை, பூசா சிறை உட்பட மேலும் ஏழு சிறைகளுக்கு சிறைத்துறை இடமாற்றம் செய்தது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே