கனடாவில் 139 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - இந்திய வம்சாவளி லாரி ஓட்டுநர்கள் கைது
கனடாவின் ஒன்ராறியோவில் சட்டவிரோத எல்லை தாண்டிய கடத்தல் வலையமைப்பு ஒன்று முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல லாரி ஓட்டுநர்களும் அடங்குவர்.
மேலும், சந்தேகத்திற்கிடமான கோகோயின், மெத்தம்பெட்டமைன் மற்றும் அபின் உள்ளிட்ட, 139 மில்லியன் டாலர் மதிப்புள்ள சுமார் 1.7 டன் சட்டவிரோத போதைப்பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது "ஒன்ராறியோவில் நடந்த மிக முக்கியமான போதைப்பொருள் பறிமுதல்களில் ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் பெயரிடப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்கள் ககன்தீப் திண்டல், சிம்ரன்ஜித் சிங், கன்வர்பால் குலார், ஜதிந்தர்பால் சிங், ஜஸ்விந்தர் சோஹி, தேஜ்விந்தர் சந்து, ஹர்ஜ்விந்தர் சந்து, தர்மிந்தர் சிங், குந்தீப் தாரிவால், மெஹக்பிரீத் சிங் மற்றும் கரந்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே