நீர்கொழும்பு சிறைக் கலவரம் - ஆயிரக்கணக்கான தடிகள் மீட்பு!
#SriLanka
#Police
#Negombo
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல்களின் போது, கைதிகள் சிறை அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின் பெரும் குவியலை, பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மீட்கப்பட்ட பொருட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடிகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கலவரத்தின் போது கைதிகள் சிறை சமையலறையிலிருந்து தேங்காய்களை எடுத்து அதிகாரிகள் மீது வீசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீர்கொழும்புசிறையில் நடந்த இந்தத் துயரச் சம்பவத்தில் எட்டு சிறை அதிகாரிகளும் 21 கைதிகளும் உயிரிழந்தனர்.
மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணையைத் தொடங்கியது. அதன் போது சிறை வளாகத்திற்குள் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடிகளும் கம்புகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே