யாழில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 30ற்கும் மேற்பட்ட யாசகர்கள் கைது

#SriLanka #Jaffna #Arrest #Tourist #beggars #L4
Prasu
3 hours ago
யாழில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 30ற்கும் மேற்பட்ட யாசகர்கள் கைது

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சுற்றுலாத்துறைக்கு இடையூறுஏற்படுத்தும் வகையில் நடமாடிய 30ற்கும் அதிகமான யாசகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றாலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.

சுற்றுச் சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவேகானந்தராஜா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு நாளாந்தம் பல்வேறு வகையிலும் யாசகம் என்ற போர்வையில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

images/content-image/1783703852.jpg

இந்த நடவடிக்கையின் போது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 யாசகர்கள் மற்றும் வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டபின் குறித்த நபர்கள் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது சிறுவர்கள் பலரும் வியாபார ரீதியில் குறித்த யாசகம் பெறும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது. 

இதையடுத்து குறித்த சிறுவர்களின் பாதுகாவலர்களாக இருப்போர் எச்சரிக்கப்பட்டு இனிவரும் நாள்களில் இவ்வாறு செயற்பட மாட்டோம் என்ற ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4