தெற்கு பிரான்சில் கடுமையான காட்டுத்தீ பரவல் - 3,000 பேர் வெளியேற்றம்
வரலாற்றுச் சாதனை அளவிலான வெப்ப அலையைத் தொடர்ந்து, தென்மேற்கு பிரான்சில் காட்டுத்தீ முன்கூட்டியே பரவியது குறித்து பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு எச்சரிக்கை விடுத்த நிலையில், அங்கு கிட்டத்தட்ட 3,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
செயிண்ட்-மேரி-லா-மெர் நகரில் காட்டுத்தீ ஏற்பட்டு, அது கேனட்-என்-ரூசிலோன் பகுதிக்கும் பரவியதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மூன்று முகாம்களில் இருந்து பாதி பேர் உட்பட, கிட்டத்தட்ட 3,000 பேர் வெளியேற்றப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
பைரனீஸ்-ஓரியண்டேல்ஸ் மாகாணத்தின் உயர் பிராந்திய அதிகாரியான பியர் ரெக்னால்ட் டி லா மோத், இரண்டு தீயணைப்பு வீரர்கள் லேசான காயங்களுடன் தப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தீயை அணைப்பதற்காக 200 தீயணைப்பு வீரர்களும், நீர் குண்டு வீசும் நான்கு ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே