INDvsENG - மழை காரணமாக கைவிடப்பட்டது முதல் T20 போட்டி
#India
#Rain
#Lanka4
#T20
#Cricket
#England
#cancelled
#L4
Prasu
3 hours ago
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இத்தொடரில் ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் நடைபெற்றது.
இந்த போட்டிக்கான நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணி சார்பில், அபிஷேக் 59 ஓட்டங்களும் ஷ்ரேயஸ் ஐயர் 68 ஓட்டங்களும் சிவம் துபே 42 ஓட்டங்களும் குவித்தனர்.
முதல் இன்னிங்ஸ் முடிவடைந்ததும் மழை குறிக்கிட்டதால் இங்கிலாந்து அணி களமிறங்க தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்தும் மழை பெய்து வந்ததால் போட்டி கைவிடப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே