கொழும்பு மாநகர சபையில் ஊழல் : விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீட்டிப்பு!
#SriLanka
#Colombo
#Fraud
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
கொழும்பு மாநகர சபையில் 2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் கற்பனை செய்ய முடியாத அளவிலான பெரும் ஊழலும் மோசடியும் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு இதனை அம்பலப்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விவகாரத்தை மேலும் விசாரிப்பதற்காக, ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி,கடந்த 29ஆம் திகதியுடன்முடிவடைய இருந்த ஆணையத்தின் விசாரணை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே