தெல்தெனிய கொடூரம்: காதலனுக்கு உதவிய பிரதேச சபை ஓட்டுநரும் கைது; விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் அம்பலம்!

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
தெல்தெனிய கொடூரம்: காதலனுக்கு உதவிய பிரதேச சபை ஓட்டுநரும் கைது; விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் அம்பலம்!

தெல்தெனிய இயன்முறை சிகிச்சை நிபுணர் (Physiotherapist) மரணத்துடன் தொடர்புடைய வழக்கின் பிரதான சந்தேகநபருக்கு, போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொடுத்த குற்றச்சாட்டில் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே குற்றச்சாட்டின் பேரில், குண்டசாலை காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

இவர் மெனிக்ஹின்ன காவல் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி என்பதுடன் இவர் காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் இரட்டை சகோதரரும் ஆவார்.

இந்த மரணச் சம்பவத்தை மறைப்பதற்கும், பிரதான சந்தேகநபருக்கு உதவி செய்வதற்கும், குறித்த காவல்துறை அதிகாரி எவ்வாறு செயற்பட்டார் என்பது தொடர்பான பல தகவல்களை சந்தேகநபர் காவல்துறையிடம் வாக்குமூலமாக வழங்கியுள்ளார்.

அவர் தனது வாக்குமூலத்தில், "சம்பவத்தின் பின்னர் நான் குண்டசாலை பிரதேச சபையின் சாரதியின் வீட்டில்தான் தலைமறைவாக இருந்தேன். அவரிடமே நான் உதவி கோரினேன்.

அவர் மூலமே எனக்கு இந்த காவல் அதிகாரியின் தொடர்பு கிடைத்தது.

சாரதி அந்த காவல் அதிகாரிக்கு தொலைபேசியில் அழைத்து பேசினார். 

பின்னர் அந்த அதிகாரி சாரதியின் வீட்டிற்கு வந்து என்னிடம், 'எனது சகோதரன் காவல்துறையின் உயர் அதிகாரி, எனவே எதற்கும் பயப்பட வேண்டாம். 

இந்த சாரதியின் இரண்டு வழக்குகளையும் எனது சகோதரன் தான் கவனித்துக்கொண்டார்' என்று கூறி எனக்கு நம்பிக்கை அளித்தார்," எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சாரதியின் மனைவியை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, அவரிடமிருந்து பிரதான சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்ற நாளில், சாரதியின் மகன் அவருக்கு 50,000 ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் கார்டு ஒன்றையும் வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகிய மூவரிடமும் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவர்களுடன் குண்டசாலை காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4