தொல்பொருள் கலைப்பொருட்களைத் தேடி அகழ்வாராய்ச்சி - 03 சந்தேகநபர்கள் கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
செமமது காப்பகப் பகுதிக்குள் தொல்பொருள் கலைப்பொருட்களைத் தேடி சட்டவிரோத அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்களை போகஸ்வேவ பொலிசார் கைது செய்துள்ளனர்.
போகஸ்வேவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழுவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நேற்று (22) நடத்தப்பட்ட சோதனையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் நச்சதுவ மற்றும் பூனாவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் வயது முறையே 23, 38 மற்றும் 74 என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போகஸ்வேவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே